கடந்த 2011ஆ ம் ஆண்டு செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலிக்கு திருமணம் நடந்தது. செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் படத்தில் கீதாஞ்சலி உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
கடந்த 2016-ம் ஆண்டு மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தை கீதாஞ்சலி இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.
இப்போது, தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து கீதாஞ்சலி தன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
கீதாஞ்சலி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஜனவரியில் குட்டி செல்வா அல்லது குட்டி கீதாஞ்சலியை காண ஆவலாக உள்ளோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Baby number 3 on the way… our silver lining! Lilavathi, Omkaar, @selvaraghavan and I are eagerly awaiting our January release! #lockdownbaby #babybump #mommylife #ownyourcurves #stayhome #staysafe #stayhappy #SamsungNote20Ultrahttps://t.co/zmat1ESWLE pic.twitter.com/Pn27VtcTRG
— Gitanjali Selvaraghavan (@GitanjaliSelva) September 2, 2020